மீ.விசுவநாதன்

 
படிக்கப் படிக்க இனிக்கிறது
பலவாய்க் கருத்தும் விரிகிறது
முடிக்க முடியாக் கதைகளுமே
மூச்சில் முடிக்க முடிகிறது !
கடித்துக் குதறும் படியாவும்
காதல் பெருகும் மொழியாலும்
துடிக்கத் துடிக்க மனம்பதற
துன்பம் மறைய எழுதுகிறார் !

 

சிரிக்கச் சிரிக்கச் சிலகதையும்
சிந்தை மகிழப் பலகதையும்
செரிக்க முடியாக் கருத்துகளைச்
சேர்த்து வைத்த சிறுகதையும்
உரித்தே அளிக்கும் பழம்போல
உள்ளம் கவரும் கவிதைகளும்
தரித்த அறிவுச் சுரங்கத்துள்
தனித்தே அலைதல் சுகமன்றோ !

(22.06.2016)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *