மலர்சபா

 

மதுரைக் காண்டம் 10. வழக்குரை காதை

மன்னவன் உரைத்த விடை

1f9072f0-a8c3-4f73-a44d-58a45649abec

மன்னவன் உரைத்தான்:
“பெண் அணங்கே!
கள்வனைக் கொல்லுதல்
கொடுங்கோல் ஆகாது;
அதுவே அரச நீதியாகும்.”

கண்ணகி தன் சிலம்பின் தன்மையை அறிவித்தல்

“அறநெறி பின்பற்றாத
கொற்கை நகரத்து வேந்தனே!
என் காலுக்கு அணியாய் விளங்கும்
சிலம்பின் பரல்கள் மாணிக்கமே”
என்றாள் கண்ணகி.

மன்னவன் தன் தேவியின் சிலம்பில் உள்ள பரல் முத்து எனக்கூறி, காவலர் கொண்டுவந்த சிலம்பைக் கண்ணகியின் முன் வைத்தல்

தேனைப் போன்ற மொழியுடைய
கண்ணகி உரைத்தது
சரியான கூற்றேயாகும்.
எம்முடைய சிலம்பில் உள்ள பரல்கள் முத்தே
என மனதுக்குள் நினைத்து
அச்சிலம்பைக் கொண்டுவரும்படி
காவலரிடம் கூறினான்.
அவர்கள் கொண்டுவந்த சிலம்பைக்
கண்ணகி முன் வைத்தான்.

கண்ணகி சிலம்பை உடைக்க மாணிக்கம் மன்னவன் முகத்தில் தெறித்தல்

கண்ணகி காலில் அணிகின்ற
சிலம்பினை உடைக்க
அதிலிருந்த மாணிக்கம்
மன்னவன் முகத்தில் தெறித்தது.

படத்துக்கு நன்றி:
கூகுள்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *