587756ba-80c1-45fc-94da-b106d6ab5ebd
நீந்தித் தவழ்ந்து நடந்துவிரைந்(து) ஓடி
ஏந்தினாய் வேடங்கள் எத்தனை -சாந்தி
உனக்களிக்க வெண்பாவில் உட்கார்நீ ஓய்வாய்
எனக்களிப்பாய் வேலை எழுத்து….
”எனக்கவலைத் தந்தாய் மனக்கவலை தீரும்”
எனக்குசேலன் நட்புக்(கு) இளகும் -குணக்கடலே
மாபாவச் செல்வம் மனதில் சுமக்கின்றேன்
கோபாலா கொள்ளைக்குக் காத்து….
இன்றுபோய் நாளைவா என்றிலங்கை வேந்தனிடம்
அன்றுரைத்த அன்பே அரிமயமே -இன்றாகி
நேற்றான நாளையே, நேரான வட்டமே
கூற்றான காவலா காப்பு….கிரேசி மோகன்….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *