பவள சங்கரி

Org201201241041286378000

மலையில் மணம்வீசும் மென்மலர்கள்
மாலையில் கலையிழந்து தலைசாயும்
மறுபடியும் மொட்டாகி மலரும்மணம்
இது மலரின் வாடிக்கை

மழையும் புயலும் வெள்ளமும்
மலரையும் மணத்தையும் அள்ளிச்செல்லும்
கனியும் சுவையும் காணாமலடிக்கும்
இது இயற்கையின் வேடிக்கை

மலையும் அறமும் அசராமல் நிற்கும்
கலையும் மணமும் கருத்தென கொள்ளும்
மழையும் வெள்ளமும் இயல்பென ஏற்கும்
இது மலையின் நிறம்

பூவோ புயலோ மழையோ வெள்ளமோ
காயோ கனியோ கருப்போ வெளுப்போ
மலையைப் பிளக்க மாதவம் செய்வதில்லை
இது மலையின் வரம்

பூவும் மணமும் கலையும் மலையும்
இயற்கையின் அம்சங்கள் மாறா நிலைகள்
மனமும் குணமும் மதமும் மாற்றமும்
இயல்பாய் நீளும் இருண்மைகள்

இணையப் படத்திற்கு நன்றி

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *