மீ.விசுவநாதன்

 
ரயிலுவண்டி வருகிறது – அது
ராவில் ஊருள் நுழைகிறது
குயிலுகுரல் கொடுக்கிறது – படு
குஷியாய்ப் பக்கம் வருகிறது !

வெளிச்சமுடன் அருகினிலே – ஒரு
விஷயம் சொல்லத் துடிக்கிறது !
முளிச்சபுள்ள கதவருகில் – என்
முகத்தப் பாத்துச் சிரிக்கிறது !

சிறுவசில தெருவுனிலே – அவள்
சிலுப்பி நடந்த நினைவிருக்கு
வறுகடலை எடுத்துவந்து – என்
வாயில் தந்த உணர்விருக்கு !

அவளையிங்கு இறக்கிவிட்டு – ரயிலு
அடுத்த ஊரு நகர்கிறது
இவளையிங்கு இணைவதற்கு – இந்த
ரயிலு தானே உதவியது !
(03.07.2016)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *