கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
”பிம்மாலை நேரத்தில் புள்ளில்(கருடனில்) வருகின்ற
அம்மாலை வேண்ட அடைக்கலம்: -’கம்’மாளே(சும்மா’கம்னு’ இருக்கும் ஆளே!)
காலைக் கடனாக கேசவ் வரைந்தனுப்ப
மாலைக்(திருமாலைக்) கடனாக மாற்று’’….
”முதலைவாய் சிக்கி மதகளிறு ஆதி
முதலைவா வென்றைக்க மூன்றில் -முதலாய்
கருடன் அமர்ந்து கஜேந்திரனைக் காத்த
புருடனைப் போற்றல் பிழைப்பு”….கிரேசி மோகன்….