கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
“அந்தணர், மந்திரம், ஆடம் பரமின்றி,
சந்திர வம்சத்து ஸ்ரீரங்கன்,-நந்தனின்,
வீட்டுச்சேய் பால்வெளியில், வேந்தனாய் ஆவதைக்,
காட்டிய கேசவ் கவி”….(1)
—————————————————————————————————————–
பழையன களைதலும், புதியன கொள்ளலும்….
———————————————————————————
“ராம கிரணமாய் ,ராத்திரி வந்தவனுக்கு,
நாம கரணம் நடக்கும்முன், -காமதேனு,
பால்சுரக்கப் போச்சு, பழையரா மாயணங்கள்,
மால்பிறப்பு பாகவத மாச்சு”….(2)
——————————————————————————————————————-
“பால்கோலம் இட்டு பசுயிரெண்டு சுற்றிவர
மால்கொள் கிறான்பார் மணிமகுடம்; – ஆள்கொல்ல,
சிம்மமாய்த் தூணில் சிலிர்த்தெழுந்த கண்ணனுக்கு,
சும்மாவே சிம்மா சனம்”….(3)
ஆள்-இரணியன்….
————————————————————————————————————
“பாலா பிஷேகமே பட்டா பிஷேகமாய்
கோலோ கலமாகக் கொண்டாடும் -மாலோலன்;
ஆவிந்தன் பாலில் அபிஷேக நீராடி
கோவிந்தன் கொற்றவைக் கூத்து”….(4)….கிரேசி மோகன்….
———————————————————————————————————————