09b6a6cb-58bd-4b6e-91b2-a2516966a139

“அந்தணர், மந்திரம், ஆடம் பரமின்றி,
சந்திர வம்சத்து ஸ்ரீரங்கன்,-நந்தனின்,
வீட்டுச்சேய் பால்வெளியில், வேந்தனாய் ஆவதைக்,
காட்டிய கேசவ் கவி”….(1)
—————————————————————————————————————–

பழையன களைதலும், புதியன கொள்ளலும்….
———————————————————————————
“ராம கிரணமாய் ,ராத்திரி வந்தவனுக்கு,
நாம கரணம் நடக்கும்முன், -காமதேனு,
பால்சுரக்கப் போச்சு, பழையரா மாயணங்கள்,
மால்பிறப்பு பாகவத மாச்சு”….(2)
——————————————————————————————————————-

“பால்கோலம் இட்டு பசுயிரெண்டு சுற்றிவர
மால்கொள் கிறான்பார் மணிமகுடம்; – ஆள்கொல்ல,
சிம்மமாய்த் தூணில் சிலிர்த்தெழுந்த கண்ணனுக்கு,
சும்மாவே சிம்மா சனம்”….(3)

ஆள்-இரணியன்….
————————————————————————————————————

“பாலா பிஷேகமே பட்டா பிஷேகமாய்
கோலோ கலமாகக் கொண்டாடும் -மாலோலன்;
ஆவிந்தன் பாலில் அபிஷேக நீராடி
கோவிந்தன் கொற்றவைக் கூத்து”….(4)….கிரேசி மோகன்….
———————————————————————————————————————

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *