சிவசம்போ

71a83413-c1ce-4cbe-bbed-a38b573d73b3
மீ.விசுவநாதன்

ஆத்தங் கரையுறை ஆதி சிவனிடம்
அன்பு வைத்திருப்பேன் – மனம்
அச்சம் தவிர்த்திருப்பேன் – அந்தக்
கூத்தன் விழிதனில் கூடிய பின்னாலே
கொஞ்சம் தனித்திருப்பேன்- கண்ணீர்
கொட்டப் பனித்திருப்பேன் !

கொத்துச் சடைமுடி கொண்ட பெருமகன்
கூட நடந்திடுவேன் – தீபம்
கொண்டு வழிபடுவேன்- இந்த
வெத்து மனிதனை வேட்டை ஆடென
விழுந்து கும்பிடுவேன்- சிவ
வித்தை நம்பிடுவேன் !

தும்பை மலரிலே தூய வெள்ளையாய்த்
தோன்றும் உருவெடுப்பேன் – ஈசன்
தோளை அரவணைப்பேன் – கங்கைச்
சொம்பை கண்ணிலே கண்ட போதிலே
சொக்கன் நினைவாவேன் – கயிலை
சோதி பனியாவேன் !

வெட்ட வெளியிலே விடையின் மீதிலே
வீற்று அருள்கொடுக்கும் – உமை
வேந்தன் அடிபணிவேன் – உயிர்
விட்டு வெளியிலே செல்லும் போதிலே
வேத ஒலியாவேன் – சிவ
வீதி விளக்காவேன் !

(இன்று பிரதோஷ தினம் : 17.07.2016)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *