வித்தக இளங்கவி
விவேக்பாரதி 

தனத்த தந்தன தனதன தனதன
தனத்த தந்தன தனதன தனதன
……
தனத்த தந்தன தனதன தனதன – தனதானா ! 

செழித்த மஞ்சளொ டழகுடை நுதலினிற்
சிவக்க குங்கும மணிபெற அணிபவள்
……
சிவத்தி னங்கமு முடையவ ளுமையவள – ளடிபேணிச்

சிறக்கு மந்நிலை அடையுக விரையுக
சிவத்தி னுள்பொரு ளறியுக உயருக
……
சிதைக்கு மின்னலு மவளடி சரணெனின் – கடிதேகும் !

கொழித்த கொங்கையு மதரமு முடலினில்
குதிக்கு மங்கியு குழைகளு மிடையினில்
……
குறுக்க ணிந்திடு மணிகளு மதிசயப் – பொருளாகும்

கொடுக்க நல்வர மிழிவொடு துயரினைக்
கெடுக்க வென்றவ ளழகினைத் தொழுதிடக்
…….
கொதிப்ப டங்கிடு மழிவுக ளழிவதைணர்வோமே !

வழித்த டந்தனி லுமையவ ளதுபெயர்
விளிக்க வந்திடு மொருபுது பலமொடு
……
விழிக்கு ளிங்ஙண மரிதெனு மறிவென – உணர்ந்தேதான்

வளத்தை நல்கிடு முலகதின் கதியெனும்
வனக்கொ ழுந்தினை மதியினுள் நிறுவுக
……
வருத்த மன்னையி னருளடி தொழுதிட – வுடனோடும்

சுழித்த கங்கையுஞ் சுடர்விடு மதியொடு
சுழற்றும் வெஞ்சின விழியது முடையரண்
…..
சுவைக்கு மெல்லித ழுடையவ ளுமையவ – ளெனநாடி

சுகத்தைத் தந்திடு வெனமொழி பகருக !
சொடுக்கி யின்னலைக் களையுக வெனுந்தினம்
……
சுடர்க்க தம்பவி ழியினருள் பொழியுவ – ளுமையாளே !


 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *