மீ.விசுவநாதன்

 

மலரினால் பூசை செய்யும்

     வகைநா(ன்) அறிந்தே(ன்) இல்லேன் !

சிலரது அறிவைப் போல

     சிறிதும் கொண்டேன் அல்லேன் !

பலவகை திரியும் எண்ணம்

     படிந்த பாவி நானும்

குலகுரு உந்தன் பாத

    குணத்தில் கரைந்து போனேன் !

 

மனதிலே மாசு நீங்க

   மௌன மொழியால் நித்தம்

முனகிடு குருவின் பேரை ,

    மூச்சுப் பயிற்சி யாலே

சினமிலா பண்பு ஓங்கும் ,

    சிந்தைத் தெளிவு காணும்

எனவொரு வழியைச் சொல்லி

    எனக்குள் வந்த ஞானி !

 

உலகிலே வந்து விட்டேன்

   உற்ற துணையைத் தேடிப்

பலமுறை அழுது விட்டேன்

    பலம்நீ என்று நம்பி

நிலவொளி ஒத்த உந்தன்

   நினைவில் பற்று வைத்தேன்

இலையெனத் தள்ளி டாமல்

    என்னுள் வரவு மானாய் !

 

உருகியே உள்ளன் போடு

    உதவி எனவே கேட்டால்

இருவினை தீரும் வண்ணம்

    இவரே அள்ளிக் கொடுப்பார் !

“அபிநவ வித்யா தீர்த்தர்”

    அருளை வேண்டும் பக்தன்

கவிதனை ஏற்றுக் கொண்டு

     கருணை பொழிவார் சத்யம் !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *