விவேக்பாரதி

 

தனனதந்த தத்தத்த தந்த

…தனனதந்த தத்தத்த தந்த

……தனனதந்த தத்தத்த தந்த – தனதானா !

 

மணமறிந்த தெத்திக்கு மந்த

…மதுவருந்த தித்தித்த வண்டு

……மதிமயங்கி சுற்றித்தி ரிந்த – மலரோடு

 

மரமுவந்து கொட்டிக்க னிந்த

…மணியிலிங்கு மொத்திட்ட தென்றல்

……மகிழவந்து கட்டிப்பு ரண்ட – கனியோடு

 

கணமுமிங்கு சுற்றிக்கி டந்த

…கடுமைகல்லின் செக்குற்ற எண்ணெய்

……கமழவந்து பற்றித்தி கழ்ந்த – அகலோடு

 

கடவுளென்னு மொப்பற்ற வொன்று

…கவலைதுன்ப மெத்திக்க ளைந்து

……கருணைதந்து சித்திக்கு மென்ற – மதியோடு

 

பணியொடந்த கட்டிச்ச தங்கை

…பவளதண்டை யிட்டுத்தொ டர்ந்து

……பரமதந்தை பக்கத்து றைந்து – நடமாடும்

 

பருவமங்கை சக்திக்க தம்ப

…பதமறிந்து துக்கத்தெ ழுந்து

……பகருமன்ப ருக்குச்சி றந்த – வுமையாளை

 

அணிதிரண்டு சுற்றிக்கி டந்து

…அழகுசங்க மத்தைப்பு கழ்ந்து

……அருளவென்று பற்றிப்ப டர்ந்து – தொழுவோமே !

 

அயிலையந்த யிக்கட்ட ழிந்து

….மமரரங்கு சுற்றத்தை வெல்ல

……அழகனங்கை வெற்றிக்கு நல்கு – முமையாளே !

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *