உமையாள் திருப்புகழ் 5
விவேக்பாரதி
தனனதந்த தத்தத்த தந்த
…தனனதந்த தத்தத்த தந்த
……தனனதந்த தத்தத்த தந்த – தனதானா !
மணமறிந்த தெத்திக்கு மந்த
…மதுவருந்த தித்தித்த வண்டு
……மதிமயங்கி சுற்றித்தி ரிந்த – மலரோடு
மரமுவந்து கொட்டிக்க னிந்த
…மணியிலிங்கு மொத்திட்ட தென்றல்
……மகிழவந்து கட்டிப்பு ரண்ட – கனியோடு
கணமுமிங்கு சுற்றிக்கி டந்த
…கடுமைகல்லின் செக்குற்ற எண்ணெய்
……கமழவந்து பற்றித்தி கழ்ந்த – அகலோடு
கடவுளென்னு மொப்பற்ற வொன்று
…கவலைதுன்ப மெத்திக்க ளைந்து
……கருணைதந்து சித்திக்கு மென்ற – மதியோடு
பணியொடந்த கட்டிச்ச தங்கை
…பவளதண்டை யிட்டுத்தொ டர்ந்து
……பரமதந்தை பக்கத்து றைந்து – நடமாடும்
பருவமங்கை சக்திக்க தம்ப
…பதமறிந்து துக்கத்தெ ழுந்து
……பகருமன்ப ருக்குச்சி றந்த – வுமையாளை
அணிதிரண்டு சுற்றிக்கி டந்து
…அழகுசங்க மத்தைப்பு கழ்ந்து
……அருளவென்று பற்றிப்ப டர்ந்து – தொழுவோமே !
அயிலையந்த யிக்கட்ட ழிந்து
….மமரரங்கு சுற்றத்தை வெல்ல
……அழகனங்கை வெற்றிக்கு நல்கு – முமையாளே !