திருமால் திருப்புகழ்….
மந்தவெளி மாரிச்செட்டி தெரு ஸ்ரீனிவாசப் பெருமாள்….
———————————
இந்த பெருமாளைப் பத்தி சொல்லியே ஆகணும்….உப்பிலியப்பன் எங்க குலதெய்வம்னா, இவர் எங்க காவல் தெய்வம்….25வயசு வரை எனக்கு பரிட்சை ரிஸல்ட் வந்தாலும் சரி….காலில் சிரங்கு வந்தாலும் சரி…..என்னோட தந்தை வழி பாட்டி நாலணா உண்டில போட்டுட்டு ,இந்த பெருமாளைத்தான் நம்புவோ….கோமுட்டிச் செட்டியார் கைங்கரியத்துல இந்த மந்தவெளி மாரிச்செட்டி தெரு வெங்கடாசலபதி திருப்பணி நடக்கறது….இந்தக் கோயில் தாயார் சாக்ஷாத் பராசக்தி….பச்சை கலர் புடவையை இவளுக்கு சாத்திட்டு ‘’பில்-கேட்ஸ்’’ ஆகணும்னு வேண்டிண்டாலும் நிறைவேத்தி வப்பா…எதோ ஒரு சந்தத்துக்கு எழுதிண்டு போறச்சே , *ஈற்றடில இவர் வலிந்திடாது குதித்து எழுந்தருளியபோது , ப்ரபத்தி சரணாகதியை ப்ரஸ்தாபிக்கும் வைணவ விசிஷ்டாத்வைதத்தை உணர்ந்து அனுபவித்தேன்….எல்லாம் வல்ல மைவண்ணனுக்கும் நன்றி…’’
—————————————————————————————————————-
’’பெருமாள் திருப்புகழ்’’
—————————————–
தந்ததன தானத்தத்த தந்ததன தானத்தத்த
தந்ததன தானத்தத்த -தனதான….
’’ரெண்டுவிரல் சேரக்கட்டி பஞ்சுதனை நாசிக்கிட்டு
பிண்டமென ரேழிக்கட்டில் -சவமாக
சங்குபறை மோளக்கொட்டு அன்புமகன் தீயைப்பற்ற
பெண்டிரழ ஓலைக்கட்டில் -தனிலேறி
கொண்டுசுடு காடுக்கிட்டு வெந்துதண லாகச்சுட்டு
இந்தவுடல் போலிச்சட்டை -எனநானும்
அந்தரம ணேசர்க்குற்ற சொந்தஅனு பூதிக்கொத்த
உந்தனிரு தாளைப்பற்ற -அருள்வாயே
தொண்ட(ன்)அனு மானுச்சிப்ப றந்தரத மேறிக்கற்க
பஞ்சவிஜ யோருக்கொப்ப -மொழிகீதை,
சந்தகிரி வாரிக்கொட்டு கந்தரனு பூதிப்பித்த
கண்டர்விழி ஜோதிப்புத்ரர் -முறைமாம
உண்டுலக(ம்) ஏழைத்துப்ப பண்டைஇலை ஆலத்தெப்பம்
சென்றபலி சாயக்குட்டை -திருவோணா
*தந்தைவழி பாட்டிக்கென்று நின்றருளும் கோமுட்டிக்கு
மந்தவெளி மாரிச்செட்டி -பெருமாளே….கிரேசி மோகன்….
—————————————————————————————————————–