அயிகிரி நந்தினி மெட்டில் பெருமாளின் த்வாதச நாமத் துதி….

இன்று ஆரம்பம்….முதல் மூன்று நாமங்கள் ‘’கேசவா, நாராயணா, மாதவா’’….

“கேசவாய , நாராயணாய ,மாதவாய, கோவிந்தாய , விஷ்ணுவே ,திரிவிக்ரமாய ,வாமனாய,சீதராய ,ரிஷிகேசாய ,பத்பனாபாய ,தாமோதராய ,மதுசுதனாய”…..

“களமுற பார்த்தனின் கலவர வேர்த்தலைக்
கழுவிடு தீர்த்தமாம் கீதையதால்
உளமுரம் கூட்டினை ஒருரதம் ஓட்டினை
பலமுற காட்டினை பாதையதை
பொலபொல என்றுதி காலையை முந்திடும்
பரவசக் கோதையின் பாசுரத்தால்
அலைகடல் விட்டுயர் பட்டரின் பெட்டையை
கட்டிடக் கேட்டிடும் கேசவனே”….(1)
ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

“சரியபி தாம்பரம் நழுவக தாயுதம்
பிளிறும்க ஜேந்திரன் குரல்கேட்டு
பறவைசு தாகரம் விரையவ னாந்திரம்
எறியசு தர்சனம் விரல்விட்டு
துரிதநி வாரண முனிகள்த போவனம்
பறையும்க தாம்ருத காரணனே
முரளிம னோகர கமலப தாம்புய
அனந்தந ராயண பூரணனே”….(2)
ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

“அவையென இவையென அளவிடல் தவறென
கவிமணி மலையணில் கூட்டியதை
புவிதனில் ஏழையை பிள்ளையை வேழனை
மகிழ்வுறச் செய்ததைக் காட்டினையே
தவியுற ஆய்க்குடி தளிர்விரல் தூக்கிட
குளிர்மழை காத்தனை யாதவனே
கவிகளின் காப்புக் கடவுள்முன் தோப்புக்
கரணம்செய் காக்கும் மாதவனே”….(3)
ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *