crazy
————————————————————–

“கள்ளம் கபடின்றி, கையேந்திய சங்கரர்க்கு
உள்ளங்கை நெல்லி உவந்தளித்த -உள்ளத்தின்
வீரதர் மத்தால் வியந்தவர் வேண்டிட
கூரையைப் பிய்த்தவளைக் கொஞ்சு”….(1)

“சுதாமன் அவலுக்கு சொர்ணங்கள் தந்தாய்
கதாமகன் கீர்த்தியை கண்ணனுக்(கு) -இதோவென்று
பொன்னோடு பேரை புறக்கணித்த பூவையே
நின்னோடு சேர்ந்தகண்ணன் நார்”….(2)

“பொன்வைக் குமிடத்தில் பூவைப்போர் மீதிவள்
கண்வைக்க கஞ்சனும் கர்ணனே -முன்வைத்தக்
காலைப்பின் வைக்கா கடுமுயற்சி யாளர்க்கு
வேலை திருவினையாள் வாகு”….(3)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *