-எம் . ஜெயராமசர்மா – மெல்பேண், அவுஸ்த்திரேலியா

 

na-muthukumar

காஞ்சியில் பிறந்து கவிதையில் நுழைந்து ஆண்டுகள் குறுகி அமரராய் விட்டாய். பாரதிவழியில், பட்டுக்கோட்டையார் வழியில் பாவலனாய் மிளிர்ந்து பாதிவழியில் போய்விட்டாய். குறுகிய காலத்தில் அறிவுடன் எழுதி அடையாளமாகி நின்றாய். ஆனந்தயாழும், அழகு அழகும் உன்னைத் தேசியக் கவிஞனாக்கிப் பரிசினைப் பெற்றுத்தந்தது. ஆயிரம் பாடலுக்கு மேலெழுதி அனைவரின் அகத்திலே அமர்ந்துவிட்டாய்.

மரணம் பற்றிய வதந்தி பாடிய நீயோ இன்று அதற்குள் அகப்பட்டுக்கொண்டாய். முத்துக்குமார் என்னும் உடம்புதான் அழிகிறதே அன்றி முத்துக்குமாரின் உணர்வுகள் சாகாவரம் பெற்று நிற்கின்றன. கவிஞனுக்கு மரணமே இல்லை. என்றாலும் உனது கவிமுகத்தைக் காணமுடியாதே…என்னும் கவலையால் யாவரும் கண்கலங்கி உனது பிரிவுக்கு இரங்கல் கூறி ஏக்கமாய் நிற்கின்றோம்!

***

மரணம் பற்றிய வதந்தி!               

திருஷ்டி கழிந்தது என்றார்கள்
தீர்க்காயுசு என்றார்கள்
படபடத்தோம் என்றார்கள்
எப்போதோ எழுதிய
என் கவிதையைச் சொன்னேன்
இறந்து போனதை
அறிந்த பிறகுதான்
இறக்க வேண்டும் நான்.

[நா. முத்துக்குமாரின் கவிதை]

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “ஆனந்த யாழுக்கு  அஞ்சலி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *