கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
–கிரேசி மோகன்
’’பள்ள மதைநோக்கிப் பாய்கின்ற வெள்ளமெனக்
கொள்ளிடத் தானிருகால் கொள்கையாய் – உள்ளமே
கள்ளமில்லா நம்பிக்கை கண்மூடக் கும்பிடு
வள்ளல் பெரும்பசுவாய் வாழ்வு’’
’’ஊதா நிறத்தவன் ஊதிக் களைத்தனன்
ராதை கழுத்தென்னும் சங்கை – போதை
தலைக்கேறக் கண்ணனவன் தோளைத் தழுவி
வளைக்கரத்தால் போரென்றாள் மாது…
(அல்லது)
——————————————— – போதை
இதம்தர கண்ணந்திண் மார்பைத் தழுவி
சுதந்திர வாழ்த்துரைத்தாள் சாது!’’