கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
’’கிளியலங் காரன் கிளிகொஞ்சும் கண்ணன்
களிகொள்ளும் ஓவியத்தைக் காண , -தளிகையில்
கைதவறி பாலில் கனிவிழுந் தாற்போல்:
மெய்தவறா கிள்ளை முனி’’….கிரேசி மோகன்….
கிள்ளை -கிளி….
பாகவத எட்டைக் கொஞ்சிட பாகவதம்
எழுதிய கிளி முக சுக முனி சப்த ரிஷிகள்
சமேதராய் கிளி ரூபத்தில் எட்டாகிக்
கண்ணனைக் கொஞ்சுகிறார்….!
கிளிகொஞ்சும் கண்ணன் -அழகு….!கேசவ்….!