கிரேசி மோகன்

———————————————

தனதான தத்தன தனதான தத்தன
தனதான தத்தன -தனதான

பொது
——–

“கபவாத, பித்தமும், சளிதோஷ சத்தமும்,
தலைநோவும் ,ரத்தமும் -வெளியேறும்
குதமூல பெளத்ரமும், நகம்மீது சுத்தியும்,
படர்சோகை, மக்கிடும் -விழிபார்வை

சபைநாற வைத்திடும் சனிவாயில் சொத்தையும்,
உமிழ்நீர்தெ றித்திட -உருள்நாவும்,
செரிமானம் அற்றிட பிரிவாய்வ சுத்தமும்,
சொறிநோய்அ ரிப்பதும், -இதுபோக

அபவாத புத்தியும், மமகார சித்தமும்,
அவதூறு ரைத்திடும் -விடநாவும்,
அணுகாது சத்துவ மனமேனி உற்றிட
அலைமேல்ப டுத்திடும் -மணிமார்பா

மதுகேசி, சக்கிரன், முலைபூதம், சர்ப்பமும்,
சிசுபால வர்க்கமும், -முறைமாமன்
தரைசாய இத்தரை அவதார முற்றனை,
அருளாய்யெ னக்கரி -பெருமாளே”….கிரேசி மோகன்….!
காப்பு
—————

“சிந்தை மகிழ சிவநேசர்செ விதனில்
மந்த்ர வடிவ உபதேசம ருளிய
கந்த முருக கதிர்காமம ருகனின் -முறைமாம
அந்த ரிவயி ரவிவாமமி றைவனின்
பங்கு திரும யிலைவாழுமை இளைய
தங்கை வருகை சினமாமனி டம்உரை -சிறைபால
முந்தை வினைகள் முளையோடுவி டுபட
சிந்தை வடிவில் பலநாள்பழ கியவ
கந்தை விலக ரமணேசர்வ ழிதனில்-நடமாட
எந்தை வருக ரகுநாயக வருக
என்று அருண கிரியார்புகழ் தமிழின்
சந்த நடையில் வரவேணும்நெ டிதுயர் -பெருமாளே”….கிரேசி மோகன்….!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *