எங்கும் மங்களம்அருளிடு ஐங்கரனே !
சரஸ்வதிராசேந்திரன்
ஆதி முதல்வனே
ஆனை முகத்தவனே
ஆதிசக்தி மைந்தனே
ஆனந்த வினாயகனே
முன்னை வினையின்
முதலைக் களைபவனே
அருள்வாய் உனைதினம்பணிந்தேன்
அன்னை பராசக்தி அருள் மகனே !
மத்தள வயிறோனே
உத்தமி புதல்வனே
மோதகப் பிரியனே
மூஷிக வாகனனே
வடிவேல் சோதரனே
அடியினைத் தொழுவேன்
தேனொடுபாலும்தினம் தருவேன்
திருவருள் தந்திடுவாய் சம்பு குமாரா
சங்கரன் புதல்வனே
ஐங்கர நாயகனே
அவல்பொரிஅப்பமுடன்
அரிசிக்கொழுக்கட்டை
வடை சுண்டலும்படைப்பேன்
அடைக்கலம் தருவாய் ஐயனே
சீக்கிரம் வந்திடப்பா வந்தெனக்கு
சிவனாந்தம் தந்திடுவாய் சிவன் மகனே
கணபதியே உன் பாதம்
வணங்கி துதிசெய்தேன்
வல்வினை எல்லாம்
வேறருப்பாய்வினாயகா
வல்லபை விக்ன நாயகா
வாழ்த்திப் பணிந்தேன் உன் பாதம்
பொங்கும் கருணைப் பொழிந்து
எங்கும் மங்களம் அருளிடு ஐங்கரனே