ரா.   பார்த்தசாரதி 

தனிமையையும், நிம்மதியையும் தேடாத மனிதன் இல்லை?

எங்கே என்று பலரிடம் கேட்டும் சரியான பதில் இல்லை,

ஒவ்வொருவரும்  வாழ்க்கையில் நினைக்காத நாள் இல்லை

துறவிகள் காட்டிற்கு சென்றது தவத்திற்கா,தனிமைக்கா என்றறியவில்லை!

 

நிம்மதியும், தனிமையும் எங்கே கிடைக்குமென மனிதன் எண்ணினான் ,

அங்கே ஓர் இடம் தனக்கு வேண்டும்  என்றான் ,

இருந்த இடத்தினிலே நிம்மதியும்,தனிமையும் கிடைக்குமா?

இவை இரண்டும் மனம் மௌனமாய் இருந்தால் ஈடேறுமா ?

 

நிம்மதியும், தனிமையும் அமைதியான இடத்தில்தான் தோன்றுமா ?

இதனை நாளும் தேடித்தேடி  அலைவது வீண் என்று தோன்றுமா ?

யோகிகளையும்  முனிவர்களையும்,கேட்டால் பதில் கிடைக்குமா ?

அவர்களும்  அதை தேடித்தான் செல்கின்றனர் என கூறமுடியுமா ?

 

தனிமையிலே இனிமை இல்லை,நடு இரவில் பகலவன் தெரிவதில்லை ,

நிம்மதி என்பது    நம்   மனதிற்கு உட்பட்டதே என்று அறிவதில்லை ,

தனிமையும், நிம்மதியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களே ,

இவ்வுலகில் எதுவுமே தனிமையில்லை,அமைதிகொண்ட மனமே நிம்மதி!

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *