கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
இந்திரன்(அமரர்கோன்) கர்வம் இடிமழை மின்னலாய் தாக்க….கர்வ பங்கமாய் கண்ணன் கோவர்த்தன கிரியை ஏந்த….சமரசமாய் அமரர்கோன் சமாதானக் கொடியாய் வானவில்லை ஏந்த….வந்தது ‘’மழைக்குப் பின் முதல் வானவில்’’….
கண்ணன் நினைத்திருந்தால் இந்திரனோடு சண்டையிட்டு ஜெயித்திருக்கலாம்….
‘’வானவில்’’ சாக்கிட்டு சமரச சன்மார்க பந்து கண்ணனின் பாகவத லீலையை
கேசவ் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார்….!
”(மாட்டுக்)கொட்டாயின் வாயிலில் குன்றேந்தக் கார்வண்ணன்,
விட்டாலே போதுமென்று வானவில்லை -முட்டாள்
அமரர்கோன் கர்வம் அடங்குதல், கேசவ்!
சமரசக் கண்ணன் சிறப்பு’’….கிரேசி மோகன்….!