kesav

”துளஸிமா டத்தருகில் தாமோ தரனார்
அலஸிமாடை ஆச்சாரம் ஆக்கி -கலஸம்
வழிந்திட கீதகோ விந்தத்தை மத்தாம்
கழியால் கடைகின்றான் காண்”….

 
“வாமத்தில் மத்து, வலத்தினில் கோமாதா
ஜாமத்தில் கண்ணன் ஜனித்தது, -பூமத்ய,
பாரம் குறைக்கவல்ல, பாகவத ஓவியக்
காரனிவன் கேசவ்கா க”….

”நீலம்பா ரித்த நவநீதன் கைகளில்,
பாலின்ப வெண்ணை பிசுபிசுக்க, -காலின்பம்
கொண்டு பருகுகிறாள் கோமாதா;, கோலமிதை
விண்டுரைத்த கேசவ் வியப்பு’’….கிரேசி மோகன்….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *