கிரேசி மோகன்
—————————————————–

 

பாம்பணைப் பள்ளிப் பெருமாள் மருகோனைத்
தாம்புனைந்தார் சந்தத் தமிழ்கொண்டு -பாம்பன்
குமர குருதாசர் கூறு கவசம்
அமரநிலை சேர்க்கும் அமுது….(7)

சாம்பவி புத்திரனே சம்பு புதல்வனே
மாம்பழ வாயன் மருகோனே -பாம்பன்
அடிகள் அழைக்க அழகுமயில் ஏறி
சடுதியில் வந்தோய் சரண்….(8)

தந்தைக்கு மிக்கதோர் மந்திரம் கூறிய
எந்தையே ஏரகக் கந்தனே -முந்தைப்
பழவினைகள் போக்கி புதுவினைக்கு ஞானக்
கிழவனாய் வந்தெனையாட் கொள்….(9)

ஆறு முகம்கொண்டோய் ஆறு படைநின்றோய்
கோறும் அடியார் குறைதீர்க்கும் -மாறுபடு
சூரனைக் கொன்ற சுரமகள் கேள்வனே
பாரெனைத் தாயாய் பரிந்து….(10)

கந்தா குஹாகடம்பா கார்த்திகே யாவென்று
உன்தாள் பணிந்து உவப்புடன் -அந்தாள்
அருணகிரி போலே வருணகவி பாட
தருணமிது தாராய் தமிழ்….(11)

அண்ணா மலைதீபம், உண்ணா முலையுந்தி,
விண்ணாளும் தேவர்தம் வெற்றி, -எந்நாளும்,
காப்பதற்குக் கையில், கதிர்வேல் கொண்டவனாம்,
தீப்பொறி தோற்றத்தைத் தொழு….(12)….கிரேசி மோகன்….!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *