இன்று கேசவ் கிருஷ்ணரைப் பார்த்ததும் , நண்பர் இரா.முருகர் சார், அனுப்பிய பத்து வயது MS அம்மா பாடிய ”மரகத வடிவும்” திருச்செந்தூர் பிள்ளைத் தமிழ் பாடல், நினைவுக்கு வந்தது….அந்த தாக்கத்தில் எழுதியது….!

kesav

”மரக தவடிவை ,மாவிலைப் பச்சை
நிறமது நெஞ்சில் நிறைய, -பரகதி
மோட்சம் கொடுத்திடும் மோகன ரூபனின்
காட்சிக்கு கேசவ் கரம்”….!

”மரகத மேனி,மாந்தளிர் பச்சை
நிறமது நெஞ்சில் நிறைய, -நரகதில்
வீழாது மோட்சத்தில் வாய்த்திடும் வாழ்வுனக்கு:
கூழாகும் வெவ்வினைகள் காண்”….!

நிவேதனம்
————–
திருக்கண் ணமுது, திரள்கின்ற வெண்ணை,
பருப்புதயிர் சாதம், பழங்கள் -உருக்குலைந்து
அண்டாவில் சாறு(பழரசம்), அதிரசம் சீடைமுறுக்கு,
உண்டேனுன் நாமம் உரைத்து….கிரேசி மோகன்….!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *