பி.  தமிழ்முகில் 

 

சிறகை விரித்திடு

சித்திரப் பெண்ணே !

உலகிற்கே பொதுவான

வானம் – அது உன்னையும்

ஏந்திக் கொள்ள

எந்நாளும் தயாரே !

அடிமைத் தளைகளை

உடைத்தெறிந்து

உன்னதமாய் உலகை

வலம் வா !

அடக்கமும் அமைதியும்

உன்னுள் இருக்கட்டும் !

வீரமும் விவேகமும்

விழிப்புடனே இருக்கட்டும் !

அச்சமும் நாணமும்

கொண்டிருந்த காலம்

மலையேறட்டும் !

தைரியமும் தெளிவும்

எப்போதும் உனக்கு

துணையாகட்டும் !

ரவுத்திரம் பழகு !

வேதனை சோதனை என

அனைத்தும் உன்

சாதனைக்கு அடித்தளமாகட்டும் !

துணிந்து முன்னேறு –

உலகமே காத்திருக்கிறது

உனக்காய் !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *