பாரத மக்களின் மகத்தான ஆதரவு!

0

பவள சங்கரி

தலையங்கம்

பிரதமர் மோதி அவர்களின் நிதானமான உறுதியான, தீர்க்கமான முடிவுகளும், தெளிவான சிந்தனைகளும் நம் நாட்டை வல்லரசாக்கும் என்ற நம்பிக்கையை மக்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது. பிரதமரின் சீரிய திட்டங்கள் மூலம் பொருளாதாரத்தில் இந்தியா தலை நிமிர்ந்துள்ளதும் கண்கூடு. வானியலிலும் விண்ணை நோக்கி நமது பெருமை செல்லும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தொலைத்தொடர்புத் துறை, வாணிகம், இந்தியாவின் பாதுகாப்பு என ஒவ்வொரு துறையிலும், ஒவ்வொரு இந்தியக்குடிமகனும் பெருமைகொள்ளத்தக்க வகையில் நம் பிரதமரின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. உலகம் முழுவதும் பொருளாதாரத்தில் வீழ்ச்சியடைந்திருக்கும் இக்காலகட்டத்தில், இந்திய பொருளாதாரம் உறுதியான நிலையில் இருக்கும்வகையில் இறக்குமதிக்குரிய பொருட்களுக்கு பரிவர்த்தனையாக உரூபாயை கொடுப்பது என்று உறுதியான முடிவு எடுத்திருப்பதும், இராணுவத் தளவாடங்கள், விமானங்கள் போன்ற இராணுவ பயன்பாட்டிற்கானவைகள் இந்தியாவிலேயேதான் தயாரிக்கப்படவேண்டும் என்று கொள்கை முடிவெடுத்து பயன்பாட்டிற்குக் கொண்டுவந்திருப்பதும், தொழில் துறையில், சீனாவிற்கு அடுத்தபடியாக வளர்ச்சியடைந்திருப்பதற்கும் இதன் மூலம் பல இலட்சம் வேலை வாய்ப்புகள் ஏற்பட்டிருப்பதும் நமது பிரதமர் மோதி அவர்களின் ஆட்சியில் நிகழ்ந்திருக்கும் ஆக்கப்பூர்வமான நிகழ்வுகள். இத்தனைக்கும் மேலாக இதுவரை ஊழல் தொடர்பான எந்தவிதமான செய்திகளும் வெளிவரவில்லையென்பதும் பாராட்டிற்குரிய செயல்.

பாகிஸ்தான், காஷ்மீருக்குள் அத்துமீறி உள்நுழைந்து நமது 16 இராணுவ வீரர்களைக் கொன்ற மோசமானதொரு சூழலை நமது பிரதமர் எவ்விதமாகக் கையாளப்போகிறார் என்று ஒவ்வொரு குடிமகனும் கவலையுடன் இருந்தபோது, படிப்படியாக அண்டை நாடுகளின் ஆதரவைப்பெற்று பாகிஸ்தானை தனிமைப்படுத்தி பொருளாதாரம், நீர்வளம் அனைத்திலும் இந்தியக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீருக்குள் நமது இராணுவத்தை அனுப்பி அங்கிருந்த ஏழு தீவிரவாதிகளின் தளங்களைத் தகர்த்து, சுமாராக நாற்பது தீவிரவாதிகளை அழித்துள்ளனர். நமது பிரதமர் மோதி அவர்களின் இந்த நடவடிக்கைகளுக்கு 130 கோடி மக்களும் அவர்பின் உள்ளனர் என்பதே நிதர்சனம். இனி எடுக்கக்கூடிய இராணுவ நடவடிக்கைகளின் மூலமாக பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு உள்ள தொடர்பை முற்றிலுமாக அழித்து நமது நாட்டின் எல்லைப்பகுதிகள் முழுவதும் அமைதியாக இருக்கும் வகையில் தீவிரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதே மக்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

வெல்க பாரதம்!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *