க. பாலசுப்ரமணியன்

 senseofagoosetop

 

நீரைத்தேடி..

நிலத்தைத்தேடி ..

நிழலைத்தேடி….

வானம்பாடி !

 

உணவைத்தேடி

உறவைத்தேடி

ஊரைத்தேடி

வானம்பாடி !

 

வில்லின் அம்பாய்

வானில் கோலங்கள்

விண்ணும் மயங்கும்

மண்ணும் வியக்கும்

நாளையைத் தேடி

இன்றே பயணம் ..

 

வீடுகள் தாண்டி

நாடுகள் தாண்டி

உலகின் மொழியாய்

ஒன்றே குரலாய்

அன்பைப் பகிர்ந்திட

அரங்கங்கள் தேடி..

வானில் பறக்கும்

வானம்பாடி !

 

காற்றும் மழையும்

காலையில் வந்தால்

மாலையில் மறையும்

கலங்கியே நின்றால்

காலங்கள் தோற்கும்

கடமைகள் முடிக்க

கலங்கிட மறுக்கும் 

 

சிறகுகள் திறந்ததும்

சிதறிடும் துயரங்கள்

சிந்தனை ஒன்றிட

சீரிய பயணம்

 

வானில் பறக்கையில்  

வீடும் ஒன்று,

வாசமும் ஒன்று ;

ராகங்கள் ஒன்று

கானங்கள் ஒன்று

 

வாழ்க்கை ஓட்டத்தை

வாழ்ந்தே காட்டும்

வாழ்ந்தே  காட்டும்

வானம்பாடி !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *