எம். ஜெயராமசர்மா … மெல்பேண் … அவுஸ்திரேலியா 

26-1448504357-jayalaitha2311-600

ஜெயமென்னும் பெயர்கொண்டு
ஜெயித்துவந்த ஜெயாவம்மா
ஜெயாமுதல்வர் பதவியுடன்
ஜீவனையே கொடுத்துவிட்டார்
ஜெகமதனில் ஜெயிப்பதற்கு
ஜெயலலிதா ஆகிநின்றார்
ஜெயித்துவிட்டார் உள்ளமெலாம்
ஜெயாவம்மா வாழுகிறார் !

துணிவுகொண்ட பெண்ணானார்
துயர்பலவும் தான்கண்டார்
தனிமையிலே தவித்தாலும்
தமிழ்நாட்டை நினைத்துநின்றார்
அமுதான தமிழோடு
ஆங்கிலமும் பேசிநின்றார்
அதிமுகாவினது ஆணிவேராய்
அவர் இருந்தார் !

அஞ்சாமல் ஆட்சிசெய்த
அம்மாவைக் காண்பதெப்போ
அவருடைய துணிவான
அழகுதமிழ் கேட்பதெப்போ
புன்சிரிப்பு பூத்துநிற்கும்
பூமுகத்தைக காண்பதெப்போ
புகழ்பூத்த பெண்மணியே
உனைக்காணா அழுகின்றோம் !

ஆளுமைமிக்க அரசியல் தலைவியே
ஆரையும்துணிவுடன் அணுகியே நின்றனை
போரிடும்வல்லமை உறுதியாய் கொண்டனை
காலனைவென்றிடும் வல்லமை இழந்ததேன் !

உன்முகத்தைக் காணாமல் உள்ளமெலாம் அழுகுதம்மா
உன்னுழைப்பை உரமாக்கி உயரமெலாம் உயர்ந்தாயே
என்னினிய தமிழ்மக்கள் எனவெங்கும் குரல்கொடுத்தாய்
உன்னினிய குரல்கேளா ஓலமிட்டு அழுகின்றோம் !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *