தாயே….தமிழகமே!
உயிர் மெய்யைப்
பிரிந்தாலும்
தமிழர்கள் உயிரோடு
கலந்த ஒரு
உறவுச் சொல்!
அம்மா………..
வாழ்வின் அரும்பில்
உயிர் கொடுத்த
தந்தையை இழந்தாய்!
வாழ்வின் வசந்தத்தில்
உயிர் சுமந்த
தாயை இழந்தாய்!
உறவின்றித் தவித்த
உள்ளத்தில் குடிகொண்ட
உலகத் தமிழர்களின்
உன்னதத் தாயானாய்!
உன்னை வரவேற்கத்
தென்றல் மறுத்தாலும்
தீயினில் நடந்த
தென்றல் நீயன்றோ?
எது சுகம் மண்ணில்
என ஏங்கி இராமல்
என் சுகம் தமிழர்
தன்சுகம் என்றாய்!
எத்தனை சறுக்கல்கள்
எத்தனை இடர்கள்
எத்தனை எதிரிகள்
எத்தனை வரினும்
எரிமலை உன்முன்
எரிந்து சாம்பலாக
ஏழையின் வாழ்வில்
ஏற்றிய ஒளியாக
நிமிர்ந்து நிற்கிறாய்!
உன்னைப் பார்த்து
பெண்ணினம் தன்னை
எண்ணிப் பெருமை கொள்கிறது!
நீ இல்லாத தமிழகத்தை
நினைக்க நெஞ்சம்
பதறுகிறது தாயே!
எமனுக்குத் தெரியாது
வந்தது அவனுக்கே
எமன் என்று!
வாழ்வின் அடையாளங்களை
மண்ணில் மறைக்க
மரணத்தால் முடியாது தாயே!
எங்களைக் காத்த உனக்கு
தங்களைக் காக்க
தெரியவில்லையே?
தாயை இழந்து
தவிப்பில் தமிழகம்
சோகத்தின் வழியில்
சிக்கி நிற்கிறது!
இறைவனின் நிழலில்
நீ இளைப்பாற
நீங்காத துன்பத்தில்
நாங்கள் கடக்கின்றோம்!
தாயே….தமிழகமே!!
– சுரேஜமீ