மின்னஞ்சல் பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்க அரசின் புதிய அறிவிப்புகள்!

0

பவள சங்கரி

தலையங்கம்

ஒன்றரை இலட்சம் கோடி வங்கிகளில் பணப்பரிமாற்றக் கட்டணங்களாக வசூலித்துவிட்டு, இந்தப் பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்க கோடிக்கணக்காக பணம் பரிசளிப்பதாக அறிவிப்பதில் என்ன நியாயம் இருக்கிறது? இன்று அரசு மின்னஞ்சல் பணப்பரிமாற்றம் அதிக முறைகளில் பயன்படுத்துவோருக்கு கோடிக்கணக்கில் பணம் பரிசாக அளிப்பதாக அறிவித்துள்ளனர். மின்னஞ்சல் பயன்படுத்துவோரை உற்சாகப்படுத்துவது நல்ல விசயம்தான் என்றாலும், வங்கிகளின் தேவையற்ற கட்டணங்களை விதிப்பது மூலம் பெரும்பாலானவர்களுக்கும் இது சுமைதான். பரிசு கிடைப்பதோ சிலருக்கு மட்டுமே..

₹3,300 பணப்பரிமாற்றம் செய்யும் ஒருவர் தன் வங்கிக்கு (இது ஸ்டேட் வங்கி கட்டண விகிதம் என்றாலும் ஏனைய அரசுடமை வங்கிகளின் கட்டணங்களிலும் பெரும் வேறுபாடு கிடையாது) ₹11.74 கட்டணமாகக் கட்டுகிறார். அந்தப் பணத்தைப் பெறக்கூடிய நபரும் தன் வங்கியில் அதே கட்டணமான ₹11.74 செலுத்தித்தான் அந்தப் பணத்தை பெறுகிறார். ஆக இருபுறமும் கட்டணங்கள் செலுத்த வேண்டியுள்ளது. இது குறைவான தொகை என்றாலும் வருட இறுதியில் இலாப, நட்டக் கணக்குகளைப் பார்க்கும்போது மக்களுக்கு இது ஒரு பெருஞ்சுமையாகவே உணரப்படும். வங்கிகளுக்கோ மொத்தக்கணக்கில் பார்க்கும் பொழுது ஒவ்வொரு ஊரிலுள்ள ஒவ்வொரு தனிப்பட்ட வங்கிக்கும் தினசரி இலட்சக்கணக்கான உரூபாய்கள் வருமானமாகக் கிடைக்கின்றன. தனியார் வங்கிகள் மற்றும் தனியார் நிதிநிறுவனங்களும் இதில் அடங்கும். இப்படிப்பட்ட சூழலில் மக்கள் மின்னஞ்சல் பணப் பரிமாற்றத்தை எவ்வாறு வரவேற்க இயலும்?

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *