மீ.விசுவநாதன்

தேவைக்கு மேலொரு காசினைத்
தேடினால் நான்குற்ற வாளிதானே!
நாவைத்தான் கட்டிடா நானுமோர்
நாட்டிலே பொய்கூறும் பிள்ளைதானே !
சேவைக்கு நெஞ்சிலே கொஞ்சமும்
சிந்தனை செய்யாத கள்ளனானேன் !
சாவைத்தான் எண்ணிடா மானுடச்
சாத்திரம் கூறுமொரு வேடனானேன் !

மாடாக நித்தமும் வேலைசெய்
மாந்தரின் கூலியிலே சூடுவைதேன் !
கோடானு கோடியாய்ச் சூதினைக்
கொட்டியே நல்லோரை நோகடித்தேன் !
கூடாத நட்பினால் கூடியே
கொஞ்சமா கொண்டாட்ட(ம்) ஆடிருப்பேன்?
தேடாத ஈசனைத் தேடுறேன்
தீவினை தீர்த்தெனையும் காத்திடாயோ !

(அறுசீர் விருத்தம் வாய்பாடு:
காய், கூவிளம், கூவிளம், கூவிளம்,காய்,காய்)

(14.12.2016 10.08 am)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *