வேதா. இலங்காதிலகம்

 

( அந்தராயம் – தீமை, துன்பம், இடையூறு.

நிந்திதம் – பரிகாசம், ஏளனம், தடை.

நிந்தனை – இகழ்ச்சி.   சிலவங்கம் – மீன்முள்ளு.

இலகம் – ஊமத்தை. )

 

அந்தராயம் நிறை மனதின் கேடயம்

தந்திரம், வஞ்சகம், சதியாம் இரண்டகம்.

சுந்தரமல்ல மனிதநேயத்திற்கு ஒரு சுத்தியலாம்.

நிந்திதம்  நிந்தனை தாழ்ச்சியே பலனாம்.

 

உலக வட்டத்தின் சாப அத்தியாயம்

கலகச் சரித்திரம் கருப்பாக்கும் சாயம்.

இலகம் போன்ற வேண்டாத குணம்.

சுலபமல்ல மோதும் சூழ்ச்சியின் வேகம்.

 

சூழ்நிலைக் களத்தில் மீன் பிடிக்கும்

கீழ் நிலைப் பாதகம் தலைகோதாது.

ஆழ் கீறலால் மனம் அந்தரிக்கும்

மூழ்கும் வேகம் இருண்ட காடாகும்.

 

நிலவின் குளிரல்ல துரதிட்டம், வெப்பம்

குலவும் நம்பிக்கைத் துரோக வலயம்

சிலந்தி வலையே சூழ்ச்சி அத்தியாயம்.

சிலவங்கமே சூழ்ச்சியாளர் உள்ளிருக்கும் ஊழ்வினையாவார்.

 

தாழ்வுமனப்பான்மை, கவலையால் மீள்வு கொள்ள

தாழ்ந்த மனதால் புன்னகை மறுத்து

கீழிழுத்து அன்பு மொட்டுகளைக் கொய்து

வாழ்வை ஒழிக்கும் பயங்கரம் சூழ்ச்சி.

 

ஆழ்மனப் பயப் பேரலைகளின்  திமிறுதல்கள்

கீழ் விழாதெழும் இரண மன

கீழ் மக்களின் கூர் நக வேலைப்பாடுகள்

வாழ்தலின் முயல்வுகள் இரண்டகமான சூழ்ச்சியாம்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *