பூவே ! செம்பூவே
ரா.பார்த்தசாரதி
பூவே, செம்பூவே ! உனக்காக நான் காத்திருப்பேன்
என் மனதில் கவிதையாய் உன்னைக் காண்கின்றேன்
சோலை வனத்தில், நீ நடக்கும் அழகே அழகு
என் உள்ளமறிந்து அருகில் வந்து பழகு !
பூக்களும், உன் சிரிப்பில் தோற்கும்
நான் எழுதும் பாடல்களுக்கு வேர்க்கும்
பூக்களின் ஆயுளே ஒரு நாள் தானே !
பெண்ணின் தலையில் இருப்பதும் ஒரு நாள் தானே !
பூக்கள் சேர்ந்தால் மாலையாய் உருவாகும்
உன் புன்னகை பூக்கள் மாலைகளுக்கு உயிராகும்
உன்னை காணாத வேளையில் துடித்தேன்
உன்னை எண்ணாத வேளையில் மனம் தளர்ந்தேன் !
தனிமை வாட்டும் போது உன் அழகை கவிதையாக்கினேன்
என் உள்ளம் எனும் கோவிலே கூடி புகுந்தேன்
திருவிழா என்றாலே அம்மன் ஊர்வலம்
நம்மிருவரும் இணைய எப்போது திருமண ஊர்வலம் ?