ரா.பார்த்தசாரதி

 

                பூவே, செம்பூவே !  உனக்காக  நான் காத்திருப்பேன் 

                என் மனதில் கவிதையாய் உன்னைக் காண்கின்றேன் 

                சோலை வனத்தில், நீ  நடக்கும் அழகே  அழகு 

                என் உள்ளமறிந்து அருகில்  வந்து  பழகு !

             

                பூக்களும், உன் சிரிப்பில்  தோற்கும் 

               நான் எழுதும் பாடல்களுக்கு  வேர்க்கும் 

               பூக்களின்  ஆயுளே  ஒரு நாள் தானே !

                பெண்ணின் தலையில் இருப்பதும் ஒரு நாள் தானே !

             

               பூக்கள் சேர்ந்தால்  மாலையாய் உருவாகும் 

               உன் புன்னகை பூக்கள் மாலைகளுக்கு உயிராகும் 

               உன்னை காணாத  வேளையில் துடித்தேன் 

               உன்னை எண்ணாத    வேளையில் மனம் தளர்ந்தேன் !

           

               தனிமை வாட்டும் போது உன் அழகை கவிதையாக்கினேன் 

               என் உள்ளம் எனும் கோவிலே  கூடி  புகுந்தேன் 

               திருவிழா என்றாலே   அம்மன்  ஊர்வலம் 

               நம்மிருவரும்  இணைய எப்போது திருமண ஊர்வலம் ?

             

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *