சிவபிரதோஷம் – “என்னே நடிப்பு”

1

மீ.விசுவநாதன்

ரவிவர்மா
ரவிவர்மா

உன்னை விழுந்து வணங்காமல் – வெறும்
உதவாக் கரைகளின் கால்களிலே – பெரும்
உதவிகள் கேட்டே வணங்குகிறேன்.

தென்னை மரமாய் உயர்ந்தாலும் – பெரும்
திருட்டுத் தனங்களைச் செய்கின்ற – தேசத்
திருடரின் முன்னே கிடக்கின்றேன் .

என்னே நடிப்பு பணத்திற்காய் – இங்கே
இருக்கும் இழிந்தவர் செய்கின்றார் – இதை
எப்படி ஈசா ரசிக்கின்றாய் !

தின்னும் உணவினைத் தெய்வமென – யாரும்
தெளிந்தே வாழ்ந்தன(ர்) ஓர்காலம் – அது
திரும்பிட நீதான் அருளாயோ !

முன்னை வினையின் பயனோசொல் – இந்த
முட்டாள் மனிதரின் மூர்க்கமெலாம் – ஏன்
மௌனமாய் இன்னும் இருக்கின்றாய் !

(இன்று பிரதோஷ நன்னாள் – 10.01.2017 )

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “சிவபிரதோஷம் – “என்னே நடிப்பு”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *