மீ.விசுவநாதன்

av

av1

பிறப்பே இலாத உனக்காக – ஒரு
பெரிய விழாவே நடத்துகிறேன்- உன்
பேரையும் சொல்லிநா(ன்) ஆடுகிறேன்

பிறப்பாய் எடுத்த ரமணரிடம் – உன்
பித்தாய் உருகி வணங்குகிறேன் – ஒரு
பேச்சுமே இல்லைதான் வாயடைத்தேன்

இறப்பும் இனிதாய் இருப்பதற்கு – உன்
எளிய பெயரைச் செபிக்கின்றேன் – “நான்”
என்னிலே என்னையே தேடுகிறேன்

சிறப்பாய் உனக்குப் பிடிக்கின்ற – ஒரு
வில்வ இலையாய் இருக்கின்ற – என்
சிந்தையை உன்னிடம் வைக்கின்றேன்

துறப்பே சுகமாய் இருக்குமென – அவர்
சொன்ன உயிர்ச்சொல் சிவமென்றே – தினம்
சுந்தரச் சூழலில் வாழுகிறேன்

(இன்று 11.01.2017 “திருவாதிரை”
ஸ்ரீ சிவன், ஸ்ரீ ரமணரின் திருநட்சத்திரம்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *