av1

பகவான் ஸ்ரீ ரமணரின் ‘’WHO AM I” படித்து….!

’’எண்ணம் உறங்கையில் ஏதுலகம், ஆதலால்
திண்ணமாய்ச் சொல்லத் திராணியுண்டு: -கன்னம்போல்(பூச்சிக்கு கன்னம்வைக்கும் திருடன்போல்)
கூட்டுச் சிலந்திதன் கூட்டைஇ ழுப்பதுபோல்
வாட்டும் நினைவை விலக்கு’’….கிரேசி மோகன்….!

’’ரமணா-வே(RAMANA WAY)’’ ஆசிரியர் சாரதா அவர்களின் எடிடோரியலைப்
படித்து விட்டு’’….!

”வலிதாங்கி யாகவாழ், வந்த வலிக்கு
கிலிகொடுக்கும் யார்க்கென்ற கேள்வி -ஒலிக்கும்
பதிலதற்கு ஆன்மா, ’’படவா மனஸால்
எதிரொலிக்கும் மேனி எழவு(ஜடம்)’’….கிரேசி மோகன்….!

மாயநான் ஆணவம் மாற்றிடும் கோவணம்
தூயநான் நிர்வாண தெய்வீகம் -நாயனார்
யோகி ரமணரின் யோசனையைக் கேட்டுணர்வோர்
சாகிறதை வென்ற சவம்….
திருவா திரையில் திருச்சுழி ஊரில்
கருவாய் அழகம்மை கர்பம் -உருவாய்
பெருந்தவம் செய்த பகவான் ரமணர்
பிறந்து துறந்தார் பிறப்பு….கிரேசி மோகன்….!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *