இன்று 17.01.17 புரட்சித் தலைவர், பொன்மனச் செம்மல், பாரத ரத்னா டாக்டர் எம்.ஜிஆர் அவர்கள் 100 வது பிறந்த தினம். அவர் நடிப்பில் என்னை பெருமளவில் ஈர்த்த வசனம் “ஆயிரத்தில் ஒருவன்” திரைப்படத்தில் அடிமைத் தனத்தை எதிர்த்து “உங்கள் அதிகாரம் என்ன சிலப்பதிகாரமா என்றும் நிலைத்து நிற்பதற்கு?” என்ற வசனமே. அவரைப் பற்றி அதிகம் அறிந்திருக்கவில்லை எனினும், நிறைய நல்ல விஷயங்கள் தெரிந்து கொள்ளலாம் அவர் நடிப்பில். அவர் நடித்த வேட்டைக்காரன் படத்தில் வரும் கவியரசர் கண்ணதாசன் பாடல்”உன்னை அறிந்தால்” என்பதன் கருவை மையமாக கொண்டு நான் புனைந்த கவிதை.

aa

“உன்னை அறிந்தால் “

அன்பெனும் தோணியைத் துணையாகக் கொண்டு
ஆழ்கடல் சமூகத்தில் அழகாய்த் தான் முத்தெடுக்க
இன்னது யாதென்ன நீ செய்ய வேண்டுமெனில்
ஈடற்ற ஆற்றலின் உறைவிடமாய்த் திகழும்
உன்னதமான உன்னை நீ முழுவதுமாய் அறிந்துபின்
ஊக்கமாய் அனைவரோடும் ஒருசேரக் கைகோர்த்து
எண்ணும் எழுத்தும் கண்ணெனச சொல்வது போல்
ஏற்றம் நல்கும் மானத்தையும் உயிரென மதித்து
ஐயம் தெளிவுற அனைத்திலும் அறவே தெளிந்து
ஒப்பற்ற உன்குடியும் உயர்ந்திடச் செய்தால்
ஓர்நாளும் நீயுந்தான் வீரநடை போட்டு
ஓ! என அனைவர் வியக்க, கோ என வலம் வரலாம்!
தான்கற்று தனையறிந்ததோடு நில்லாது
தன்னலம் தன்னையும் தகர்த்திடுவாய் நாளும்
பிறர்நலன் நோக்கும் பேரறிவாளனாய் நீயிருந்தால்
இந்நன்னிலம் தன்னில் மன்னனாவது உறுதி!!
அதனால்
உன்னதமான உன்னை நீ முமுவதுமாய் அறிந்து
சமூகம்
உயர்வடையச் செயலாற்றுவாய் நீயுந்தான் விரைந்து!

– சித்ரப்ரியங்கா ராஜா.
திருவண்ணாமலை.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *