[  எம். ஜெயராமசர்மா…. மெல்பேண் …. அவுஸ்திரேலியா ]

 

 

 

உள்ளத்தில் உவகைவந்தால்

உன்வாழ்வு உயர்ந்துநிற்கும்

கள்ளங்கள் நிறைந்துவிட்டால்

கஷ்டத்தில் அமிழ்ந்துபோவாய்

நல்லதை நாடிநின்றால்

நம்மிடம் சொர்க்கமாகும்

அல்லவை தவிர்த்தால்வாழ்வு

ஆனந்தம் நிறைந்தேநிற்கும் !

 

மற்றவர் உன்னைப்பார்த்து

மனவெறுப் படையாவண்ணம்

சொற்களை எந்தநாளும்

சுவைபடப் பேசவேண்டும்

கற்பன கற்கவேண்டும்

கவனத்தில் கொள்ளல்வேண்டும்

அற்பங்கள் அகற்றிநின்று

அன்பையே பகிர்தல்வேண்டும் !

 

சிரிப்பினைப் பேணவேண்டும்

சிறப்பினை நாடவேண்டும்

பொறுப்புடன் நல்லவற்றை

போற்றியே நிற்றல்வேண்டும்

செருக்கினை ஒதுக்கவேண்டும்

சினமதை ஒழித்தல்வேண்டும்

அடுத்தவர் மகிழ்ச்சிபார்த்து

ஆனந்தம் அடைவாயென்றும் !

 

வாழ்த்துகள் வழங்கவேண்டும்

மகிழ்ச்சியைப் பெருக்கவேண்டும்

ஆத்திரம் அடக்கவேண்டும்

அன்பினை அளிக்கவேண்டும்

வேற்றுமை தவிர்க்கவேண்டும்

விருப்பமாய் பழகல்வேண்டும்

சாற்றிடும் சொற்கள்யாவும்

சந்தோஷம் தருதல்வேண்டும் !

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *