kesav
’’வங்கத்தை(வங்கக் கடலை) பானைக்குள் வைத்துக் கடைகின்றார்
சிங்கத்தன் பாலாழி சீதரன் -அங்கம்
கருத்தது வெண்ணைக்கு CONTRASATடாய் உள்ளம்
நிறத்தில் நவனீதம் நாடு’’….கிரேசி மோகன்….!

மதிலரங்கக் கோயில் அதிலுறங்கும் மாலே
விதிநெருங்கும் வேளை வருமுன் -பதிலளிப்பாய்
தேனடைக்குள் தேனியாய் நீயிருக்க என்னுள்ளே
நானெதற்கு வீணாய் நவில்….

நாவல் நிறத்தனே நாலாயிரம் போற்றிடும்
காவலில் தோன்றிய கண்ணனே -ஆவலால்
விட்டகன்றாய் அத்வைதம் வந்தாய் விசிஷ்டனாய்
வெட்டுநீ துண்டுரெண்டா வோம்…
பள்ள மதைநோக்கிப் பாய்கின்ற வெள்ளமென
கொள்ளிடத் தானிருகால் கொள்கையாய் -உள்ளமே
கள்ளமில்லா நம்பிக்கை கண்மூடக் கும்பிடு
வள்ளலென மாறும்காண் வாழ்வு….கிரேசி மோகன்….!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *