அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் இளைஞர்களுக்கு தடுமாற்றத்தை ஏற்படுத்தும் நிகழ்வுகள் ..
பவள சங்கரி
சல்லிக்கட்டு போராட்டத்தில் பங்குகொண்டு களப்பணியில் ஈடுபட்டுள்ள சில இளைஞர்களையும், மாணவர்களையும் சந்தித்து கலந்துரையாடியபோது, அவர்கள் வருத்தத்துடன் இந்தப்போராட்டத்தின் இறுதிக் கட்டத்தில் அரசியல் கட்சிகள் ஊடுறுவி, தங்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி விடுவார்களோ என்ற அஞ்சுவதாக வருத்தத்துடன் குறிப்பிட்டனர். மாணவர்களின் நிலைப்பாட்டிற்கு மாறாக சில சக்திகள் பயணிப்பதாகவும், அவை தங்கள் ஒழுக்க நெறிக்கு களங்கம் ஏற்படுத்துவதாகவும் வருந்தினர். தங்களுக்கு எதிராக செயல்பட்டு அவப்பெயர் ஏற்படுத்துபவர்களின் முகத்திரைகளும் சமூக வலைதளங்கள் மூலம் கிழிக்கப்பட்டுக் கொண்டுதான் உள்ளன என்றும் குறிப்பிடுகின்றனர். நாளை நடைபெறும் சட்டமன்ற நிகழ்வில் அவசர சட்டத்தை மாற்றி நிரந்தர சட்டத்தை கொண்டுவந்தால் நலம் பயக்கும் என்று எண்ணுகிறார்கள். ஒரு சில பகுதிகளில் இளைஞர்களும், மாணவர்களும் விரைவில் தங்கள் போராட்டத்தை விலக்கிக்கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்க முடிகிறது.