இல.பிரகாசம்

 

உயிர் உண்ணும் கண்கள்
களவாடிச் செல்ல
இமைகள்
இமைக்குந் தருணம் இதுவல்லவோ?

இளமைஅது கொள்ளாது கொள்ளாது உன்
உறவைத் தீண்டிட மனம் கள்ளத்தனத்
திட்டம் தீட்டுகிறது!;
தீயில் ஊறுந் தேனாய்க்
கார்மேகஞ் சூழ்ந்த மையல் கொண்ட
கயல்விழிப் பாவையின் பார்வையது பொல்லாது!

யாவரும் மோகங் கொள்ளும் கலைநயப்
பாவையின் நயனம் எனைத் தீண்டாதோ?
தீரரெனப் போற்றும் வீரர்களுக்கெல்லாம்
வீரம் விளைத்திடும் -அந்தக்
கொற்றவையின் கருணை
கடுகளவேனும் எனை தீண்டாதோ? கண்களே!

காவியம்பல போற்றும் நாயகன் நானென
பாவலர் பாடும் பாடுபொருளாய் நானாவேனோ?
உயிருறவை ஈர்க்குங் கலைநயக் காதலை
கருவில் சுமந்தலையும் கண்களே நீங்கள்
நான்கேட்ட வரமதனை தாரீரோ?

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *