சுகந்த துளசி சிலிர்க்க வலிமை
மிகுந்த இருதோளில் பூணும் -முகுந்தன்
நிதர்ஸனம் என்று நடப்போர் வழியை
சுதர்ஸனம் காக்கும் சுழன்று….
ஆலில் மிதந்தவா ஆழ்வார்கள் பாசுர
நூலில் நிறைந்தவா நந்தலாலா -தோளில்
திருத்துழாய் பூண்ட திருவோணத் தானே
கருத்தில் கலந்துவளைக் காப்பு….கிரேசி மோகன்….!
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.