கிரேசி மோகன்
தனதன தனான தனதன தனான
தனதன தனான-தனதான

“இறகும யிலாடி இலகுசு ருள்கேச
இடையர்ம கனான -பெருமாள்காண்
விரைகள பகோபி நடுவில்க ஸுதூரி
திலகநு தல் பூணும் – பெருமாள்காண்
கரியவி ழிபாசம் பொழியவ ருராம
கவுசலை குமார -பெருமாள்காண்
குமிழழ குவேத மொழிநில வுஸ்வாஸம்
உமிழள வுநாசி -பெருமாள்காண்
கறவையி னம்மேய குழலமு தகானம்
பொழிஅத ரராக – பெருமாள்காண்
ஜனகம கள்சாய சவுகரி யமான
விரியுநெ டிமார்பு -பெருமாள்காண்
விரையவி ரிவானம் ,உலகள வுகாணும்,
தொழுமுள ரிபாத -பெருமாள்காண்
அருணகிரி நாதர் வருணனை யிலேளும்
மருகன்மு றைமாம -பெருமாளே”….கிரேசி மோகன்….!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *