இதுதான் அரசியல்!
பவள சங்கரி
அமெரிக்க அதிபராக 8 ஆண்டுகள் உலகத்தையே ஆட்டிப்படைக்கும் பொறுப்பிலிருந்த முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா அவர்கள் அடுக்கு மாடிக்குடியிருப்பில் இன்று குடிபுகுந்துள்ளார். அவருடைய துணை ஜனாதிபதி, ஜோ பிடன், ஒபாமா ஆட்சியில் 8 ஆண்டுகள் துணை ஜனாதிபதியாக இருந்தவர் இவர். தான் குடியிருப்பதற்கு வைத்திருந்த ஒரே வீட்டையும் விற்று அட்வகேட் ஜெனரலாக இருந்த தன்னுடைய மகனின் வைத்திய செலவிற்கு பயன்படுத்தியும் அந்த மகனும் இறந்த அவலத்தில் இருக்கிறார். இன்று வாடகை வீட்டிற்கு தம் மனைவியுடன் குடிபுகுந்துள்ளார். அவருடைய நேர்மையையும், செயல் திறனையும் பாராட்டி அமெரிக்காவின் மிக உயரிய குடிமகனுக்கான விருதான ‘சுதந்திர ஜனாதிபதி பதக்கம்’ (Presidential Medal of Freedom) வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது யாருக்கு வழங்கப்படுகிறது என்பது இரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. விருது வழங்கும் முன்பு மேடைக்கு வந்த ஒபாமா அந்த விருதுக்குரியவராக துணை ஜனாதிபதி ஜோ பிடன் பெயரை அறிவித்தபோது ஆச்சரியத்தில் கண்ணீர் மல்க விருதைப் பெற்றார் ஜோ பிடன். ஆனால் நம் நாட்டின் நகராட்சி உறுப்பினர்கள் கூட இதைவிட பன்மடங்கு உயரத்தில் இருப்பவர்கள் என்பது எத்தனை பெருமைக்குரிய விசயம்.. நாங்கள் இந்தியர்களாக்கும்.. !
நம் அரசியல் தலைவர்களும் கொஞ்சம் கருணை வைத்தால் நலம்.. 🙁