கிரேசி மோகன்
———————————————-

 

தனனதன தனனதன தனதான தானதன
தனனதன தனனதன தனதான தானதன -தனதான….!
“சகலவித சுகமதனில் உறவாடி ஆடியுடல்
பிணிகளுற மரணயமன் வருநாளில் நாலுகர
பலகைதனில் பலருமழ சுடுகாடு சேருகணம் -கருடாழ்வார்
பறவைதனில் புவிமலர்ம கள்சமேத ராய்முதலை
பிடிநழுவ களிறழுகை முதலாதி காதுபட
விரையுஅதி துரிதமுடன் வரவேணும், நேமிவலம் -புரியோடு
தகதகவெ னஜொலிகதை சிலைவாளும் தோளசைய
அபயமென சரணமுறு எனதாவி வீடுபெற
ரவிவரும னிறகுவரை கருநீல சோபையுடன் -பரிவாக.
தளிருவிர லடியில்வரை துகளாக கோனமரன்
பொழியுமழை இடையருடல் நனையாத வாறவனின்
கருவமது ஒழியவெயில் விரிவானி லேழுநிற -சிலைமேவ,
சுகமுரளி இசைபழகு யதுவாசி தோழனென
வளருதயிர் கடையுமகள் முலைவாட, பூதகியின்
விடமொழுகு முலைநுனியில் உயிர்போக வாயுறியும் -சிசுமாலே
சிறகுமயில் முடிநழுவ, பழுதாக பீதகமும்
அரையிறுகு கயிறுமுனை உரலூற மாமருதம்
முறியயொளி சுரர்ககன வழிகாண லீலைபுரி -நவநீதா
பகருமறை எழுதுகதை இதிகாச நாரதிய
முனிவரொடு மலரயனும் கயிலாய வாசிசிவன்
புகழுபதம் ஜெயவிஜயர் புரிகாவல் வாசல்வழி -நுழைவோர்காண
பரமபத அலைகடலில் விடநாக மேளுபதம்
கனகமழை பொழியவரு அலமேலு மேவுபதம்
அடியவர்கள் வினைவிலக சரணுறு பாதமலர் -பெருமாளே”….கிரேசி மோகன்….!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *