கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
‘ஆணென்றும் பெண்ணென்றும் நானென்றும் நீயென்றும்
வீணிந்த வித்தியாசம் ஏனென்று – ஆணன்று(ஹரி)
பெண்ணானாய்(மோகினி), பெண்பாதி(சக்தி) ஆண்மைக்கு(ஹரன்) மைத்துனா!
உண்மைக்குள் உய்ய உதவு”….!
அரிதாரம் பூசி அரிதாரம் ஆனான்
கரியாடை பூண்டோன் கரத்தில்: -அறிவே!
இருமுடிக் கட்டுமயில் ஏந்தினன் உச்சி
கருமுகில் மோகினிசேய்க் காய்(அய்யப்பன்)”….கிரேசி மோகன்….!