( எம். ஜெயராமசர்மா…. மெல்பேண் … அவுஸ்திரேலியா )

 

 

கருணையொடு பாசமும் கள்ளமில்லா உள்ளமும்

உருகிநிற்கும் அன்புமே உருவமெனக் கொண்டதாய்

கருவறையில் சுமந்துமே கண்விழித்துப் பார்த்துமே

மனமுழுக்கச் சுமந்திடும் மாண்புடைய மங்கையை

நிலமுழுதும் இன்றுநாம் நீக்கமறப் போற்றுவோம்

அவள்மனதில் ஆனந்தம் அமர்ந்துவிடச் செய்குவோம் !

 

பொறுமையில் சிகரமாகி பொறுப்பினில் வைரமாகி

அறிவினில் கூர்மைகொண்டு அனைத்திலும் உழைத்துநிற்கும்

பெருமையாம் பெண்கள்தம்மை பெருமையாய் பார்க்கும்பாங்கு

உலகினில் உதிக்கவேண்டி  ஒலியுடன் குரலெழுப்பி

தனிமையில் வாடும்பெண்மை தலைநிமிர்ந் திடுகவென்று

அனைவரும் அழைப்போம்வாரீர் அவரகம் மகிழ்ந்துநிற்பார் !

 

மாதர்தம்மை இழிவுசெய்வார் மடமையைப் பொசுக்குவோம்

மாநிலத்தில் மாதர்தம்மை மதிப்புயரச் செய்குவோம்

பேதமின்றி பெண்கள்வாழ பெரிதும்பணி ஆக்குவோம்

பூதலத்தில் பெண்கள்தமை புனதமுடன் நோக்குவோம் !

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *