விஜயபாரதி

 

 

செதில்களற்ற உடலின் மேல்
முட்களில் நச்சுகளைத் தேக்கிக் காத்திருக்கி்ன்றன
பஃபர் மீன்கள்

குட்டையான சிந்தனைகளை நிரப்பி
தன் அந்தரங்கத்தை
பலூனென ஊதிப்
பெருக்கிக் கொள்கின்றன

விடத்தைக் கொரட்டில் அடக்கியபடி
நெளிகின்ற சர்ப்பங்கள் தீண்ட
நுரைதள்ளிச் சாகின்றனப் பிஞ்சுகள்

நிலங்களைப் பிளந்து நுழைக்கும்
குரூரங்களின் வேர்கள்
நந்தினி ஹாசினிகளின்
பிறப்புறப்பின் இரத்தத்தைச்
சுவைக்க நீளுகின்றன

கண்ணீர் கொதித்துக்
கொண்டிருக்கின்றன

உறைந்த இரத்தத்தில்
தீப்பிடித்துப் பரவட்டும் .

ஆண்மைகள் கருகட்டும்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *