க.பாலசுப்பிரமணியன்

 

உலகே ….

நீயே ஒரு கவிதை…

 

பகலென்றும் இரவென்றும்

வண்ணங்கள் தீட்டி ..

மகிழ்வினிலும் துயரத்திலும்

கடல் நீரை விழியோரத்தில்

வடிகட்டி..

 

வார்த்தைகளில்லா வானவில்லாய் .

நான் மௌனத்தில்..

உலவிவர..

 

உள்ளத்தில்..

உன் மாயைகள்

எனக்கு மட்டும்

அரங்கேற்றம் !

 

மொழிகள் மனதினில்

வார்த்தைகளைத்  தேடி ..

விதையில்லா மலராய் ..

வாசங்கள் பெருக்கிட….

 

ஒளியில்லா இதயத்தின்

மூலைகளில் ஒளிந்திருக்கும் அன்பே.

 

உனக்கு …. “கவிதை”

நல்ல புனைப்பெயர்தான்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *