கவிதை
க.பாலசுப்பிரமணியன்
உலகே ….
நீயே ஒரு கவிதை…
பகலென்றும் இரவென்றும்
வண்ணங்கள் தீட்டி ..
மகிழ்வினிலும் துயரத்திலும்
கடல் நீரை விழியோரத்தில்
வடிகட்டி..
வார்த்தைகளில்லா வானவில்லாய் .
நான் மௌனத்தில்..
உலவிவர..
உள்ளத்தில்..
உன் மாயைகள்
எனக்கு மட்டும்
அரங்கேற்றம் !
மொழிகள் மனதினில்
வார்த்தைகளைத் தேடி ..
விதையில்லா மலராய் ..
வாசங்கள் பெருக்கிட….
ஒளியில்லா இதயத்தின்
மூலைகளில் ஒளிந்திருக்கும் அன்பே.
உனக்கு …. “கவிதை”
நல்ல புனைப்பெயர்தான்