மீ.விசுவநாதன்

எதிபாராத் திருப்பங்கள் தந்து
எதிர்கொள்ள வைக்கின்ற சக்தி
புதிர்போல இருக்கின்ற வாழ்வை
புரிந்திடவே செய்கின்ற தாய்மை
அதிராமல் மெலிதாகப் பேசி
அன்போடு காக்கின்ற ஆசான்
துதிகின்றேன் குருநாதர் தாளை
துளிர்விடுமே ஆனந்த வேளை !

உள்ளென்று புறமொன்று பேசா
உயர்ஞான சத்தியத்தின் ஜோதி
புள்ளான அன்னத்தைப் போல
பொலிவான கருணையினை மட்டும்
அள்ளியள்ளித் தருகின்ற வள்ளல்
அவர்தானே பாரதீதீர்த் தரெனும்
வெள்ளிமலை சிவன்போன்ற ரூபன் !
வினையமுள்ள சீடருள்ளே வாசன் !

(இன்று சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ சங்கராச்சார்யாள்
அனந்தஸ்ரீ விபூஷித ஸ்ரீ பாரதீ தீர்த்த மகாஸ்வாமிகளின்
வர்த்தந்தி தினம் (பிறந்த தினம்) 02.04.2017 )

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *